ADDED : ஏப் 22, 2024 11:04 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எல் கவுனா: சர்வதேச ஸ்குவாஷ் தொடரின் மூன்றாவது சுற்றில் இந்திய வீரர் ரமித் டான்டன் தோல்வியடைந்தார்.
எகிப்தில் எல் கவுனா சர்வதேச ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. ஆண்களுக்கான மூன்றாவது சுற்றில் உலகின் 'நம்பர்--40' இந்தியாவின் ரமித் டான்டன், இதில் உலகின் 'நம்பர்--3' பெருவின் டியாகோ எலியாசை எதிர்கொண்டார். மொத்தம் 35 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய ரமித் டான்டன் 0-3 (2-11, 4-11, 2-11) என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.
அடுத்த மாதம் எகிப்தில் நடக்கவுள்ள உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு தயாராகி வரும் ரமித் டான்டன், முதலிரண்டு சுற்றுகளில் எகிப்தின் அலி ஹுசைன், பிரான்ஸ் வீரர் விக்டர் குரூயினை தோற்கடித்தார்.

