/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
காலிறுதியில் இந்திய அணி * ஸ்குவாஷ் உலக கோப்பை தொடரில்...
/
காலிறுதியில் இந்திய அணி * ஸ்குவாஷ் உலக கோப்பை தொடரில்...
காலிறுதியில் இந்திய அணி * ஸ்குவாஷ் உலக கோப்பை தொடரில்...
காலிறுதியில் இந்திய அணி * ஸ்குவாஷ் உலக கோப்பை தொடரில்...
ADDED : டிச 11, 2025 11:23 PM

சென்னை: ஸ்குவாஷ் உலக கோப்பை தொடரின் காலிறுதிக்கு இந்திய அணி முன்னேறியது.
உலக கோப்பை ஷ்குவாஷ் தொடரின் 5வது சீசன் சென்னையில் தொடர்ந்து மூன்றாவது முறையாக (2011, 2023, 2025) நடக்கிறது. இந்தியா, ஹாங்காங், 2 முறை சாம்பியன் ஆன எகிப்து உட்பட 12 அணிகள், 4 பிரிவுகளாக பங்கேற்கின்றன.
இந்திய அணி, 'பி' பிரிவில் சுவிட்சர்லாந்து, பிரேசில் அணிகளுடன் இடம் பெற்றது. முதல் போட்டியில் சுவிட்சர்லாந்தை வென்ற இந்தியா, நேற்று தனது இரண்டாவது போட்டியில் பிரேசிலை எதிர்கொண்டது.
முதல் போட்டியில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் 27, பிரேசிலின் பெட்ரோ மொமெட்டோவை 3-0 (7-5, 7-2, 7-2) என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார். பெண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் இந்தியாவின் அனாஹத் சிங் 17, பிரேசிலின் லாரா டா சில்வாவை 3-0 (7-4, 7-0, 7-2) என வென்றார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் அபே சிங், டியகோ கோப்பியை 3-0 (7-3, 7-1, 7-1) என சாய்த்தார்.
ஜோஷ்னா சின்னப்பாவுக்கு எதிராக களமிறங்க இருந்த புருனா போட்டியில் இருந்து விலகிக் கொள்ள, ஜோஷ்னா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். முடிவில் இந்திய அணி 4-0 என வென்றது. தொடர்ந்து இரண்டு வெற்றியுடன் பட்டியலில் முதலிடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறியது.
'டி' பிரிவில் எகிப்து அணி 3-1 என ஜப்பானை வென்றது. 'சி' பிரிவில் மலேசிய அணி 3-1 என ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

