/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
டேபிள் டென்னிஸ்: ஹர்மீத் அபாரம்
/
டேபிள் டென்னிஸ்: ஹர்மீத் அபாரம்
ADDED : பிப் 20, 2026 10:47 PM

சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஸ்மாஷ் டேபிள் டென்னிஸ் தகுதிச்சுற்று இரண்டாவது வெற்றி பெற்றார் ஹர்மீத் சிங்.
சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு சார்பில் 'சிங்கப்பூர் ஸ்மாஷ்' தொடர் சிங்கப்பூரில் நடக்கிறது. இதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடந்தன. ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது போட்டியில் இந்தியாவின் ஹர்மீத் தேசாய், கனடாவின் எட்வர்டை சந்தித்தார். இதில் ஹர்மீத், 3-1 என்ற (11-8, 7-11, 11-6, 11-6) செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஆகாஷ் பால், 1-3 என்ற (11-9, 6-11, 4-11, 5-11) கணக்கில் மால்டோவாவின் உர்சுவிடம் தோல்வியடைந்தார்.
இத்தொடரின் 'நம்பர்-1' அந்தஸ்து பெற்ற இந்தியாவின் சத்யன், 1-3 என (11-9, 3-11, 0-11, 0-11) என மெக்சிகோவின் கேஸ்ட்ரோவிடம் வீழ்ந்தார்.
பெண்கள் ஒற்றையர் இரண்டாவது போட்டியில் இந்தியாவின் ஆயிஹா, யாஷஸ்வினி தோல்வியடைந்தார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் தியா சிட்டாலே, 3-2 என (9-11, 8-11, 13-11, 11-2, 11-5) போலந்தின் கேத்தரினாவை வீழ்த்தினார்.

