/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஜெய்ப்பூரை வென்றது உ.பி.,: புரோ கபடியில் கலக்கல்
/
ஜெய்ப்பூரை வென்றது உ.பி.,: புரோ கபடியில் கலக்கல்
ADDED : நவ 28, 2024 09:45 PM

நொய்டா: புரோ கபடி லீக் போட்டியில் உ.பி., அணி 33-29 என ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தியது.
இந்தியாவில், புரோ கபடி லீக் 11வது சீசன் நடக்கிறது. உ.பி., மாநிலம் நொய்டாவில் நடந்த லீக் போட்டியில் ஜெய்ப்பூர், உ.பி., அணிகள் மோதின. முதல் பாதி முடிவில் ஜெய்ப்பூர் அணி 20-19 என முன்னிலை பெற்றிருந்தது. இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட உ.பி., அணிக்கு 14 புள்ளி கிடைத்தன. ஜெய்ப்பூர் அணி 9 புள்ளி மட்டும் பெற்றது.
ஆட்டநேர முடிவில் உ.பி., அணி 33-29 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. உ.பி., அணிக்கு பவானி ராஜ்புட் (8 புள்ளி), ககன் கவுடா (6), கேப்டன் சுமித் (5) கைகொடுத்தனர். ஜெய்ப்பூர் சார்பில் கேப்டன் அர்ஜுன் தேஷ்வால் 6, நீரஜ் நார்வல் 5 புள்ளி பெற்றனர்.
இதுவரை விளையாடிய 14 போட்டியில், 7 வெற்றி, ஒரு 'டை', 6 தோல்வி என 43 புள்ளிகளுடன் உ.பி., அணி 4வது இடத்துக்கு முன்னேறியது. ஜெய்ப்பூர் அணி 41 புள்ளிகளுடன் (7 வெற்றி, ஒரு 'டை', 6 தோல்வி) 8வது இடத்தில் உள்ளது.