ADDED : ஏப் 15, 2025 09:21 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: இந்திய பளுதுாக்குதல் வீராங்கனை மீராபாய் சானு 30. டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்திய பளுதுாக்குதல் கூட்டமைப்பு தடகள கமிஷன் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து மீராபாய் சானு கூறியது:
சக பளுதுாக்குதல் வீரர், வீராங்கனைகளின் குறைகளை சரி செய்ய வாய்ப்பு கிடைத்தது பெருமையாக உள்ளது. இதை சீரியசாக எடுத்துக் கொண்டு முழுவேகத்துடன் பொறுப்பாக செயல்படுவேன். மற்ற விஷயங்களால் பாதிக்கப்படாமல், அனைவரும் தொடர்ந்து போட்டிகளில் கவனம் செலுத்துவதை உறுதி செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.