தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/பளுதுாக்குதல்: சிக்கலில் மீராபாய்

பளுதுாக்குதல்: சிக்கலில் மீராபாய்

பளுதுாக்குதல்: சிக்கலில் மீராபாய்


UPDATED : நவ 04, 2025 10:56 PM

ADDED : நவ 04, 2025 10:55 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2025 10:56 PM ADDED : நவ 04, 2025 10:55 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: இந்திய பளுதுாக்குதல் வீராங்கனை மீராபாய் சானு 31. வழக்கமாக 48 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்கிறார். டோக்கியோ ஒலிம்பிக்கில் (2021), 49 கிலோ பிரிவில் வெள்ளி வென்றார். இந்த ஆண்டு 48 கிலோ பிரிவில் காமன்வெல்த் (தங்கம்), உலக சாம்பியன்ஷிப்பில் (வெள்ளி) பதக்கம் கைப்பற்றினார். அடுத்து லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் (2028) சாதிக்க தயாராகி வருகிறார்.

தற்போது, ஒலிம்பிக் பளுதுாக்குலில் இடம் பெற்ற பிரிவுகள் குறித்து அறிவிப்பு வெளியாகின. இதன் படி, 49 கிலோ பிரிவு நீக்கப்பட்டுள்ளது. இதனால் மீராபாய் சானு, 53 கிலோ பிரிவில் பங்கேற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

தேசிய பயிற்சியாளர் விஜய் சர்மா கூறுகையில்,''புதிய எடை பிரிவு மீராபாய் சானுவுக்கு சாதகமானது தான். இருப்பினும் வரும் ஆசிய விளையாட்டு முடியும் வரை, இவர், 48 கிலோ போட்டிகளில் தான் பங்கேற்பார். இதன் பின் எடையை அதிகரித்து, ஒலிம்பிக் போட்டிக்கு தயாராக வேண்டும்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us