ADDED : மார் 02, 2025 08:27 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: பெங்களூரு ஓபன் டென்னிஸ் அனிருத் சந்திரசேகர், சீனதைபேயின் ரே ஹோ ஜோடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
பெங்களூருவில், ஏ.டி.பி., சேலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் அனிருத் சந்திரசேகர், சீனதைபேயின் ரே ஹோ ஜோடி, ஆஸ்திரேலியாவின் பிளேக் பேல்டன், மாத்யூ கிறிஸ்டோபர் ரோமியோஸ் ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 6-2 எனக் கைப்பற்றிய இந்தியா, சீனதைபே ஜோடி, இரண்டாவது செட்டை 6-4 என வென்றது.
ஒரு மணி நேரம், 1 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய அனிருத், ரே ஹோ ஜோடி 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.