/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
பிரெஞ்ச் ஓபன்: காலிறுதியில் ரிபாகினா
/
பிரெஞ்ச் ஓபன்: காலிறுதியில் ரிபாகினா
ADDED : ஜூன் 03, 2024 11:22 PM

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் காலிறுதிக்கு பெலாரசின் சபலென்கா, கஜகஸ்தானின் ரிபாகினா முன்னேறினர்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் 4வது சுற்றில் பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் எம்மா நவரோ மோதினர். இதில் சபலென்கா 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா 6-4, 6-3 என உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார். இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி 4-6, 6-0, 6-1 என ரஷ்யாவின் எலினா அவனேஸ்யனை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
மெத்வெடேவ் அதிர்ச்சி
ஆண்கள் ஒற்றையர் 4வது சுற்றில் ரஷ்யாவின் டேனில் மெத்வெடேவ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் மோதினர். இதில் மெத்வெடேவ் 6-4, 2-6, 1-6, 3-6 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.