sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

டென்னிஸ்

/

எத்தனை அருமை 43 வயதினிலே எத்தனை பெருமை போபண்ணா ஆட்டத்திலே... கோப்பை வென்று சாதனை

/

எத்தனை அருமை 43 வயதினிலே எத்தனை பெருமை போபண்ணா ஆட்டத்திலே... கோப்பை வென்று சாதனை

எத்தனை அருமை 43 வயதினிலே எத்தனை பெருமை போபண்ணா ஆட்டத்திலே... கோப்பை வென்று சாதனை

எத்தனை அருமை 43 வயதினிலே எத்தனை பெருமை போபண்ணா ஆட்டத்திலே... கோப்பை வென்று சாதனை


ADDED : ஜன 29, 2024 03:55 PM

Google News

ADDED : ஜன 29, 2024 03:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மெல்போர்ன், ஜன. 28-

'வயது என்பது 'நம்பர்' தான்; சாதிக்க வயது தடை இல்லை' என்பதை நிரூபித்துள்ளார் இந்தியாவின் போபண்ணா. 43 வயதில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் கோப்பை வென்று சாதித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் நடக்கிறது. இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மாத்யூ எப்டென் ஜோடி, இத்தாலியின் சிமோன் பொல்லேல்லி, ஆன்ட்ரியா வாவசோரி ஜோடியை எதிர்கொண்டது.

'டை பிரேக்கர்' வரை நீடித்த முதல் செட்டை 7-6 எனக் கைப்பற்றிய இந்தியா-ஆஸ்திரேலிய ஜோடி, இரண்டாவது செட்டை 7-5 என தன்வசப்படுத்தியது. ஒரு மணி நேரம், 39 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய போபண்ணா, எப்டென் ஜோடி 7-6, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இந்த வெற்றியின் மூலம் கிராண்ட்ஸ்லாம் ஆண்கள் இரட்டையர் பிரிவில் போபண்ணா தனது முதல் பட்டத்தை கைப்பற்றினார். தவிர இது, இவரது 2வது கிராண்ட்ஸ்லாம் இரட்டையர் பட்டமானது. இதற்கு முன் 2017ல் கனடா வீராங்கனை கேப்ரியேலா டப்ரோவ்ஸ்கியுடன் இணைந்து பிரெஞ்ச் ஓபன் கலப்பு இரட்டையரில் கோப்பை வென்றிருந்தார்.

கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற 3வது இந்திய வீரர், 4வது இந்தியரானார் போபண்ணா. ஏற்கனவே இந்தியாவின் லியாண்டர் பயஸ் (ஆண்கள் இரட்டையர்-8, கலப்பு இரட்டையர்-10), மகேஷ் பூபதி (ஆண்கள் இரட்டையர்-4, கலப்பு இரட்டையர்-8), சானியா மிர்சா (பெண்கள் இரட்டையர்-3, கலப்பு இரட்டையர்-3) கோப்பை வென்றிருந்தனர்.

மூத்த வீரர்


அதிக வயதில் (43) கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரரானார் போபண்ணா. இதற்கு முன் 2022ல் நடந்த பிரெஞ் ஓபன் ஆண்கள் இரட்டையரில் நெதர்லாந்தின் ஜீன்-ஜூலியன் ரோஜர், தனது 40வது வயதில் கோப்பை வென்றிருந்தார்.

'நம்பர்-1' இடம்


நாளை வெளியாகும் ஏ.டி.பி., ஆண்கள் இரட்டையர் பிரிவு தரவரிசையில் இந்தியாவின் போபண்ணா முதன்முறையாக 'நம்பர்-1' இடத்தை கைப்பற்றுகிறார். இதன்மூலம் இச்சாதனை படைத்த 3வது இந்திய வீரர் என்ற பெருமை பெற உள்ளார். ஏற்கனவே பயஸ், பூபதி முதலிடம் பிடித்திருந்தனர்.

தவிர இவர், அதிக வயதில் முதன்முறையாக 'நம்பர்-1' இடம் பிடிக்கும் வீரராகிறார். இதற்கு முன் 2022 அக்டோபரில் வெளியான தரவரிசையில் அமெரிக்காவின் ராஜிவ் ராம், தனது 38வது வயதில் முதன்முறையாக 'நம்பர்-1' இடம் பிடித்திருந்தார்.

'பயோ டேட்டா'

பெயர் : ரோகன் போபண்ணாபிறந்த நாள் : 04-03-1980பிறந்த இடம் : பெங்களூரு, கர்நாடகாசர்வதேச அறிமுகம் : 2003ஆண்கள் இரட்டையர் பட்டம் : 25கலப்பு இரட்டையர் பட்டம் : 1கிராண்ட்ஸ்லாம் பட்டம் : 2விருது : அர்ஜுனா (2018) பத்ம ஸ்ரீ (2024)



சபலென்கா

பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் 'நம்பர்-2' பெலாரசின் அரினா சபலென்கா, 15வது இடத்தில் உள்ள சீனாவின் கின்வென் ஜெங் மோதினர். முதல்செட்டை 6-3 எனக் கைப்பற்றிய சபலென்கா, இரண்டாவது செட்டை 6-2 என தன்வசப்படுத்தினார். ஒரு மணி நேரம், 16 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய சபலென்கா 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 'நடப்பு சாம்பியன்' அந்தஸ்தை தக்கவைத்துக் கொண்டார். இது, கிராண்ட்ஸ்லாம் ஒற்றையரில் சபலென்காவின் 2வது பட்டமானது.








      Dinamalar
      Follow us