sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

டென்னிஸ்

/

அரையிறுதியில் மாயா ரேவதி: மும்பை ஓபனில் முன்னேற்றம்

/

அரையிறுதியில் மாயா ரேவதி: மும்பை ஓபனில் முன்னேற்றம்

அரையிறுதியில் மாயா ரேவதி: மும்பை ஓபனில் முன்னேற்றம்

அரையிறுதியில் மாயா ரேவதி: மும்பை ஓபனில் முன்னேற்றம்


ADDED : பிப் 07, 2025 09:54 PM

Google News

ADDED : பிப் 07, 2025 09:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: மும்பை ஓபன் டென்னிஸ் அரையிறுதிக்கு இந்தியாவின் மாயா ரேவதி முன்னேறினார்.

மும்பையில், பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் மாயா ராஜேஷ்வரன் ரேவதி, ஜப்பானின் மெய் யமாகுச்சி மோதினர். முதல் செட்டை 6-4 எனக் கைப்பற்றிய மாயா ரேவதி, 2வது செட்டை 3-6 என இழந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் எழுச்சி கண்ட இவர், 6-2 என தன்வசப்படுத்தினார். முடிவில் மாயா ரேவதி 6-4, 3-6, 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, சுவிட்சர்லாந்தின் ஜில் டீச்மேன் மோதினர். இதில் ஏமாற்றிய ராஷ்மிகா 2-6, 2-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் பிரார்த்தனா தாம்பரே, நெதர்லாந்தின் அரியோன் ஹார்டோனோ ஜோடி 2-6, 6-4, 10-2 என பிரிட்டனின் ஈடன் சில்வா, ரஷ்யாவின் அனஸ்டாசியா டிகோனோவா ஜோடியை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது.

மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் ராஷ்மிகா, ரியா பாட்யா ஜோடி 3-6, 3-6 என இத்தாலியின் நிக்கோல் போசா, கேமில்லா ஜோடியிடம் தோல்வியடைந்தது. இந்தியாவின் ருதுஜா, பிரிட்டனின் அலிசியா ஜோடி 4-6, 3-6 என ரஷ்யாவின் அமினா அன்ஷ்பா, எலினா பிரிடான்கினா ஜோடியிடம் வீழ்ந்தது.






      Dinamalar
      Follow us