/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
ராம்குமார் ராமநாதன் தோல்வி: அரையிறுதியில் சுமித் நாகல்
/
ராம்குமார் ராமநாதன் தோல்வி: அரையிறுதியில் சுமித் நாகல்
ராம்குமார் ராமநாதன் தோல்வி: அரையிறுதியில் சுமித் நாகல்
ராம்குமார் ராமநாதன் தோல்வி: அரையிறுதியில் சுமித் நாகல்
UPDATED : பிப் 16, 2024 10:48 PM
ADDED : பிப் 16, 2024 10:01 PM

பெங்களூரு: பெங்களூரு ஓபன் டென்னிஸ் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் தோல்வியடைந்தார். மற்றொரு இந்திய வீரர் சுமித் நாகல் அரையிறுதிக்கு முன்னேறினார்.
பெங்களூருவில் ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், தென் கொரியாவின் சியோங்சான் ஹாங் மோதினர். முதல் செட்டை 5-7 என இழந்த ராமநாதன், பின் எழுச்சி கண்டு இரண்டாவது செட்டை 7-5 எனக் கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் ஏமாற்றிய இவர் 4-6 எனக் கோட்டைவிட்டார்.
இரண்டு மணி நேரம், 54 நிமிடம் நீடித்த போட்டியில் ராம்குமார் ராமநாதன் 5-7, 7-5, 4-6 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.