ADDED : அக் 13, 2024 09:56 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மைசூரு: மைசூரு ஓபன் ஐ.டி.எப்., டென்னிஸ் ஒற்றையரில் இந்தியாவின் ராஷ்மிகா 2வது இடம் பிடித்தார்.
கர்நாடகாவின் மைசூருவில், பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, அமெரிக்காவின் ஜெஸ்சி அனி மோதினர். முதல் செட்டை 6-3 எனக் கைப்பற்றிய ராஷ்மிகா, இரண்டாவது செட்டை 3-6 என இழந்தார். வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது செட் 'டை பிரேக்கர்' வரை சென்றது. இதில் ஏமாற்றிய ராஷ்மிகா 6-7 எனக் கோட்டைவிட்டார்.
இரண்டு மணி நேரம், 33 நிமிடம் நீடித்த போட்டியில் ராஷ்மிகா 6-3, 3-6, 6-7 என்ற கணக்கில் போராடி தோல்வியடைந்து 2வது இடத்தை கைப்பற்றினார்.