/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
காலிறுதியில் தக்சினேஷ்வர் ஜோடி
/
காலிறுதியில் தக்சினேஷ்வர் ஜோடி
ADDED : ஆக 20, 2024 11:32 PM

வின்ஸ்டன்-சலேம்: ஏ.டி.பி., டென்னிஸ் இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு இந்தியாவின் தக்சினேஷ்வர் ஜோடி முன்னேறியது.
அமெரிக்காவில் ஆண்களுக்கான டென்னிஸ் (ஏ.டி.பி.,) தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் தக்சினேஷ்வர், பிரிட்டனின் லுகா பவ் ஜோடி, இத்தொடரின் 'நம்பர்-6' அந்தஸ்து பெற்ற உருகுவேயின் ஏரியல் பெஹர், அர்ஜென்டினாவின் ஆன்ட்ரெஸ் மோல்டனி ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை 6-4 என தக்சினேஷ்வர் ஜோடி கைப்பற்றியது. இரண்டாவது செட்டில் 5-5 என சம நிலையில் இருந்த தக்சினேஷ்வர் ஜோடி, பின் 5-7 என இழந்தது.
வெற்றியாளரை முடிவு செய்ய 'சூப்பர் டை பிரேக்கர்' நடந்தது. இதில் சிறப்பாக செயல்பட்ட தக்சினேஷ்வர் ஜோடி, 10-8 என வசப்படுத்தியது. ஒரு மணி நேரம், 18 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில், தக்சினேஷ்வர் ஜோடி 6-4, 5-7, 10-8 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது.

