/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
அரையிறுதியில் தக்சினேஷ்வர் ஜோடி
/
அரையிறுதியில் தக்சினேஷ்வர் ஜோடி
ADDED : ஆக 23, 2024 11:32 PM

வின்ஸ்டன்-சலேம்: ஏ.டி.பி., டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தக்சினேஷ்வர் ஜோடி அரையிறுதிக்குள் நுழைந்தது.
அமெரிக்காவில் ஆண்களுக்கான டென்னிஸ் (ஏ.டி.பி.,) தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் தக்சினேஷ்வர், பிரிட்டனின் லுகா பவ் ஜோடி, ஈகுவடாரின் கொன்சாலோ எஸ்கோபர், கஜகஸ்தானின் அலெக்சாண்டர் ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை தக்சினேஷ்வர் ஜோடி 6-1 என கைப்பற்றியது. பின் ஏமாற்றிய இந்த ஜோடி, இரண்டாவது செட்டை 4-6 என கோட்டை விட்டது.
வெற்றியாளரை முடிவு செய்ய 'சூப்பர் டை பிரேக்கர்' நடந்தது. இதில் தக்சினேஷ்வர் ஜோடி, 10-8 என போராடி வென்றது. ஒரு மணி நேரம், 8 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில், தக்சினேஷ்வர் ஜோடி 6-1, 4-6, 10-8 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது.

