ADDED : ஜன 01, 2026 10:56 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆமதாபாத்: ஐ.டி.எப்., டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு முன்னேறினார் இந்தியாவின் வைதேகி.
இந்தியாவின் ஆமதாபாத்தில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் வைதேகி, சக வீராங்கனை செய்லி தாக்கரை எதிர்கொண்டார்.
முதல் செட்டை 6-2 என வென்ற வைதேகி, அடுத்த செட்டை 6-1 என எளிதாக வசப்படுத்தினார். முடிவில் வைதேகி 6-2, 6-1 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் பார்த்சாரதி 6-3, 6-0 என்ற நேர் செட்டில் சக வீராங்கனை ஆஹானை வீழ்த்தி, காலிறுதிக்குள் நுழைந்தார். மற்ற இரண்டாவது சுற்று போட்டிகளில் ரஷ்யாவின் கோலோவினா, யஷ்னினா, ஜப்பானின் கவமுரா உள்ளிட்டோர் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினர்.

