ADDED : ஜூலை 16, 2024 10:05 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: ஐ.டி.எப்., டென்னிஸ் காலிறுதிக்கு இந்தியாவின் விஷ்ணுவர்தன், கல்யாண்புர் ஜோடி முன்னேறியது.
தாய்லாந்தின் ஆண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் விஷ்ணுவர்தன், கல்யாண்புர் ஜோடி, தாய்லாந்தின் சுக்சும்ரர்ன், ஜப்பானின் சுயோகா ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை 6-1 என கைப்பற்றிய இந்திய ஜோடி, அடுத்த செட்டையும் 6-4 என வசப்படுத்தியது. முடிவில் இந்திய ஜோடி 6-1, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது.
மற்றொரு முதல் சுற்றில் இந்தியாவின் தக்சினேஷ்வர் சுரேஷ், ரிஷி ரெட்டி ஜோடி, தாய்லாந்தின் ஜோன்ஸ், பிலிப்பைன்சின் அல்கான்டரா ஜோடியை சந்தித்தது. இதில் தக்சினேஷ்வர், ரிஷி ஜோடி 6-7, 3-6 என்ற கணக்கில் போராடி தோல்வியடைந்தது.