ADDED : மார் 08, 2025 12:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியலுார்: அரியலுார் மாவட்டம், ஓலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுருநாதன் மகன் பிரவீன்குமார், 30; கூலித் தொழிலாளி. இவர், 10ம் வகுப்பு பயிலும் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமியின் பெற்றோர், பிரவீன்குமாரை கண்டித்தனர்.
ஆத்திரம் அடைந்த பிரவீன்குமாரும், அவருக்கு ஆதரவாக அவரது தந்தையும் சேர்ந்து சிறுமியையும், சிறுமியின் பெற்றோரையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர். சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்துமகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் பிரவீன்குமாரையும், சிவகுருநாதனையும் போக்சோவில் கைது செய்தனர்.