/
உள்ளூர் செய்திகள்
/
அரியலூர்
/
கிணற்றை துார்வாரி கிராம மக்கள் அசத்தல்
/
கிணற்றை துார்வாரி கிராம மக்கள் அசத்தல்
ADDED : மே 26, 2024 12:59 AM
பெரம்பலுார்:அரியலுார் மாவட்டம், சூரியமணல் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அக்கிராமத்தில் கடந்த 70 ஆண்டுகளுக்கு முன் குடிநீர் பயன்பாட்டிற்காக வட்டக்கிணறு ஒன்றை உருவாக்கினர். இதில், சூரிய மணல், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள், குடிநீருக்காக இந்த கிணற்றை பயன்படுத்தி வந்தனர்.
இந்த கிணற்று நீர் சுத்தமாகவும், சுவையாகவும் இருப்பதால், கோடை காலத்தில் நீண்ட துாரம் சைக்கிளில் வந்துகூட குடிநீரை எடுத்துச் செல்வது இன்றளவில் வழக்கமாக உள்ளது. இப்படி பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க பழங்கால வட்டக்கிணறு தோன்றியது முதல் இன்றுவரை துார் வாரவில்லை. இதனால் ஊற்று நீர் மிகவும் சுகாதாரமின்றி, கலங்கலாக இருந்துள்ளது.
இதனால், கிணற்றை துார்வாரபலமுறை அரசுக்கு கோரிக்கை வைத்தும், கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில், பொறுமை இழந்த கிராம மக்கள் குடிநீர் தேவையை கருதி ஒன்று கூடி துார்வாரினர்.