sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

அரியலூர்

/

மீன்சுருட்டி அருகே குளிக்கும் குளத்தில் பிடிபட்ட முதலை

/

மீன்சுருட்டி அருகே குளிக்கும் குளத்தில் பிடிபட்ட முதலை

மீன்சுருட்டி அருகே குளிக்கும் குளத்தில் பிடிபட்ட முதலை

மீன்சுருட்டி அருகே குளிக்கும் குளத்தில் பிடிபட்ட முதலை


ADDED : மே 28, 2024 09:21 PM

Google News

ADDED : மே 28, 2024 09:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பலுார்:அரியலுார் அருகே, மக்கள் குளிக்கும் குளத்தில் கரை ஒதுங்கிய, சிறிய முதலை பிடிப்பட்டது.

அரியலுார் மாவட்டம், மீன்சுருட்டி அருகேயுள்ள வீரசோழபுரம் கிராமத்தில் தீர்த்தகுளம் எனும் சிறிய குளம் உள்ளது. அந்த குளத்தை பொதுமக்கள் குளிப்பது உள்ளிட்ட அன்றாட பணிகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று காலை குளத்தில் சிலர் குளித்துக் கொண்டிருந்த போது, முதலை ஒன்றை கண்டனர். அதிர்ச்சி அடைந்த மக்கள், மீன்சுருட்டி காவல் துறை மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த காவல் துறையினர், பொதுமக்களின் உதவியுடன் முதலையை குளத்துக்குள் சென்று விடாமல் விரட்டி பிடித்தனர். இதையடுத்து, வனத்துறையினரிடம் முதலை ஒப்படைக்கப்பட்டது. பின், வனத்துறையினர் அந்த முதலையை அணைக்கரையில் விட்டனர்.






      Dinamalar
      Follow us