sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

அரியலூர்

/

நாளை மாற்றுத்திறனாளிகளுக்குஅரசின் நலத்திட்ட உதவி வழங்கல்

/

நாளை மாற்றுத்திறனாளிகளுக்குஅரசின் நலத்திட்ட உதவி வழங்கல்

நாளை மாற்றுத்திறனாளிகளுக்குஅரசின் நலத்திட்ட உதவி வழங்கல்

நாளை மாற்றுத்திறனாளிகளுக்குஅரசின் நலத்திட்ட உதவி வழங்கல்


ADDED : செப் 12, 2011 02:21 AM

Google News

ADDED : செப் 12, 2011 02:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியலூர்: அரியலூரில் நாளை (13ம் தேதி) மாற்று திறனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது.அரியலூர் கலெக்டர் அனு ஜார்ஜ் விடுத்த அறிக்கை: அரியலூர் பஞ்.,யூனியனுக்குட்பட்ட மாற்று திறனாளிகளுக்கு, பல்வேறு அரசு துறைகள் மூலம், அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் சிறப்பு முகாம் நடக்கிறது. அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நாளை காலை 9.30 மணிக்கு நடக்கும் இம்முகாமில் செயல்படுத்தப்பட உள்ள நலத்திட்டங்கள்:

*அரியலூர் பஞ்.,யூனியனில் இதுவரை மாற்று திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறாத, அனைத்து வகையான மாற்று திறனாளிகளுக்கும் தேசிய அடையாள அட்டை வழங்கப்படும்.* மாற்று திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றவர்களுக்கு, தகுதி அடிப்படையில் உரிய உதவி உபகரணங்கள் வழங்கப்படும்.*இதுவரை மாற்று திறனாளிகளுக்கான உதவி தொகை பெறாதவர்களுக்கு, தகுதி அடிப்படையில் சம்பந்தப்பட்ட தாசில்தார் மூலமாக உதவி தொகை வழங்கப்படும்.*மாற்று திறனாளிகளுக்கான இலவச வீட்டு மனை பட்டா மற்றும் வருவாய்துறை மூலம் வழங்கப்படும், அனைத்து சான்றுகளும் தகுதி அடிப்படையில் வழங்கப்படும்.

*மாற்று திறனாளிகளுக்கு வங்கி கடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.*மாற்று திறனாளிகளுக்கான இலவச தையல் மிஷின், தகுதி அடிப்படையில் மாவட்ட சமூக நல அலுவலர் மூலமாக வழங்கப்படும்.*தாட்கோ மாவட்ட மேலாளர் மற்றும் மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் மூலமாக மாற்று திறனாளிகளுக்கு வங்கி கடன் வழங்கப்படும்.*வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யாத மாற்று திறனாளிகளுக்கு, உடனடியாக பெயர் பதிவு மற்றும் பெயர் பதிவு செய்துள்ள மாற்று திறனாளிகளுக்கு வேலை வாய்பற்றோர் நிவாரண உதவி தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.*மாற்று திறனாளிகள் தங்களது குடும்ப ரேஷன் கார்டில் பெயர் விடுபட்டிருந்தால், அவர்களது பெயரை சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் ரேஷன் கார்டு இல்லாத மாற்று திறனாளிகளுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.பல்வேறு துறை சார்பாக வழங்கப்படும் அரசு நலத்திட்ட உதவிகளை பெற தகுதி உள்ள மாற்று திறனாளிகள் சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்.






      Dinamalar
      Follow us