sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

அரியலூர்

/

பள்ளி மாணவர்களிடையே மோதல்: 18 மாணவர்கள் மீது வழக்கு

/

பள்ளி மாணவர்களிடையே மோதல்: 18 மாணவர்கள் மீது வழக்கு

பள்ளி மாணவர்களிடையே மோதல்: 18 மாணவர்கள் மீது வழக்கு

பள்ளி மாணவர்களிடையே மோதல்: 18 மாணவர்கள் மீது வழக்கு


ADDED : நவ 12, 2024 07:37 AM

Google News

ADDED : நவ 12, 2024 07:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியலூர்: அரியலூர் மாவட்டம், தா.பழூர் அடுத்த விக்கிரமங்கலம் அருகே பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட ஜாதிய மோதல் தொடர்பாக 18 மாணவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தா.பழூர் அருகேயுள்ள விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 450க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். அனைத்து தரப்பினர் பயின்று வரும் இப்பள்ளியில், மாணவர்களிடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, அப்பள்ளியில் பயின்று வரும் உடையவர் தீயனூரைச் சேர்ந்த ஒரு தரப்பைச் சார்ந்த மாணவர்கள் விக்கிரமங்கலம் கடைவீதியில் பைக் ரேஸ் விடுவதும், மற்றொரு தரப்பைச் சேர்ந்த மாணவர்கள் அதனைத் தட்டிக் கேட்டு தகராறு செய்வதும் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், அப்பள்ளியில் பிளஸ் 1ஏ வகுப்பில் ஒரு தரப்பைச் சேர்ந்த மாணவர் ஒருவர் அமர்ந்திருந்த போது, அங்கு வந்த மற்றொரு தரப்பைச் சேர்ந்த மாணவர்கள் தாக்கியுள்ளனர். இதனால் இரு தரப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல், இரு சமுதாய மக்களிடையே பரவியது.

இதுகுறித்து தகவல் அறிந்த விக்கிரமங்கலம் போலீசார் பள்ளிக்குச் சென்று இரு தரப்பு மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு இரு தரப்பைச் சேர்ந்த தலா 9 பேர் வீதம் 18 மாணவர்கள் மீது வழக்குப் பதிந்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அழைத்துச் சென்றனர்.

இதற்கிடையே பள்ளிக்கு வந்த ஒரு தரப்பினர், மாணவர்கள் தாக்கி கொண்டதற்கு தீர்வுக் காணப்பட வேண்டும் எனக் கூறி விக்கிரமங்கலம், முத்துவாஞ்சேரி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையறிந்த காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அனைவரும் கலைந்துச் சென்றனர். இதனால் அச்சாலையில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது






      Dinamalar
      Follow us