sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

அரியலூர்

/

 பிரகதீஸ்வரர் கோவிலின் ரூ.1.32 கோடி சொத்து மீட்பு

/

 பிரகதீஸ்வரர் கோவிலின் ரூ.1.32 கோடி சொத்து மீட்பு

 பிரகதீஸ்வரர் கோவிலின் ரூ.1.32 கோடி சொத்து மீட்பு

 பிரகதீஸ்வரர் கோவிலின் ரூ.1.32 கோடி சொத்து மீட்பு


ADDED : நவ 19, 2025 06:38 AM

Google News

ADDED : நவ 19, 2025 06:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியலுார்: பிரகதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 1.32 கோடி ரூபாய் சொத்துகளை, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கையகப்படுத்தினர்.

அரியலுார் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் கட்டமைக்கப்பட்ட பிரகதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலம் மற்றும் கட்டடங்கள் தனிநபரால் ஆக்கிரமித்து பயன்படுத்தப்பட்டு வருவதாக புகார் எழுந்தது.

இதனை தொடர்ந்து, அரியலுார் மாவட்ட அறநிலையத்துறை உதவி ஆணையர் லட்சுமணன், கோவில் செயல் அலுவலர் செந்தமிழ்செல்வி தலைமையிலான குழுவினர், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான தனி நபரால் ஆக்கிர மிக்கப்பட்ட, 1 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பிலான இடங்களை நேற்று மீட்டனர்.

'கோவிலுக்கு சொந்தமாக சுவாதீனம் செய்யப்பட்ட இடங்கள், தனிநபர் யாரும் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது. மீறினால் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்' என்ற அறிவிப்பு வைக்கப்பட்டது. கோவிலுக்கு எதிரே தனி நபரால் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டடத்திற்கும் அதிகாரிகள், 'சீல்' வைத்தனர்.






      Dinamalar
      Follow us