sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதியில் ஓட்டளிக்காதோர் 9.50 லட்சம் பேர் 2019 தேர்தலை விட 2.6 சதவீதம் சரிவால் அதிர்ச்சி

/

ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதியில் ஓட்டளிக்காதோர் 9.50 லட்சம் பேர் 2019 தேர்தலை விட 2.6 சதவீதம் சரிவால் அதிர்ச்சி

ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதியில் ஓட்டளிக்காதோர் 9.50 லட்சம் பேர் 2019 தேர்தலை விட 2.6 சதவீதம் சரிவால் அதிர்ச்சி

ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதியில் ஓட்டளிக்காதோர் 9.50 லட்சம் பேர் 2019 தேர்தலை விட 2.6 சதவீதம் சரிவால் அதிர்ச்சி


ADDED : ஏப் 20, 2024 11:47 PM

Google News

ADDED : ஏப் 20, 2024 11:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதியில், 60.21 சதவீதம் ஓட்டுப்பதிவு நடந்துள்ளதாக, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த லோக்சபா தேர்தலை விட, இந்த தேர்தலில் 2.06 சதவீதம் குறைவாக ஓட்டு பதிவாகி உள்ளது. மொத்த வாக்காளர்களில், 9 லட்சத்து 46 ஆயிரத்து 94 பேர் இந்த தேர்தலில் வாக்களிக்கவில்லை.

ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் டி.ஆர்.பாலு, அ.தி.மு.க., வேட்பாளர் பிரேம்குமார், த.மா.கா., வேட்பாளர் வேணுகோபால், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் பிரபாகரன் உள்ளிட்ட 31 பேர் போட்டியிட்டனர்.

தொகுதியில், 31 பேர் போட்டியிட்டதால், ஆறு சட்டசபை தொகுதிகளிலும், ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் தலா இரண்டு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரம், ஓட்டுப்பதிவு சரிபார்ப்பு இயந்திரம் தலா ஒன்று என, நான்கு இயந்தியங்கள் பயன்படுத்தப்பட்டது.

இந்த தொகுதியில், ஆண் வாக்காளர்கள் 11 லட்சத்து 80 ஆயிரத்து 263 பேர், பெண் வாக்காளர்கள் 12 லட்சத்து ஆயிரத்து 427 பேர், மூன்றாம் பாலினத்தவர் 429 பேர் என, மொத்தம் 23 லட்சத்து 82 ஆயிரத்து 119 வாக்காளர்கள் உள்ளனர்.

இதில், 18 வயது முதல் 19 வயது வரை உள்ள இளம் வாக்காளர்கள், 32,243 பேர், 85 வயதிற்கு மேற்பட்ட முதியோர், 24,579 பேர், மாற்றுத்திறனாளிகள் 7,850 பேர் உள்ளனர்.

இந்த தொகுதியில், 2,437 ஓட்டுச்சாவடிகளில், நேற்றுமுன்தினம் ஓட்டுப்பதிவு நடந்தது. இதில், ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து 29 ஆயிரத்து 861 பேரும், பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 6 ஆயிரத்து 105 பேரும், இதர வாக்காளர்கள் 59 பேரும் என, மொத்தம் 14 லட்சத்து 36 ஆயிரத்து 25 ஓட்டுக்கள் பதிவாகின. ஆறு தொகுதியிலும், 60.21 சதவீதம் பேர் ஓட்டு போட்டனர்.

இந்த லோக்சபா தேர்தலில், 9 லட்சத்து 46 ஆயிரத்து 94 பேர் ஓட்டளிப்பதை தவிர்த்துள்ளனர். இதனால், ஓட்டுப்பதிவு சதவீதம் கடந்த 2019 தேர்தலை விட 2.6 சதவீதம் சரிந்துள்ளது.

கடந்த 2019 லோக்சபா தேர்தலில், 62.27 சதவீதம் ஓட்டுப்பதிவானது. இந்த முறை, 2.06 சதவீதம் ஓட்டுப்பதிவு குறைந்துள்ளது. இதில், பெண்களை விட ஆண்கள் அதிகமாக ஓட்டளித்துள்ளனர்.

வாக்காளர் ஓட்டுப்பதிவு விபரம்

சட்டசபை தொகுதி ஆண் பெண் மூன்றாம் பாலினம் மொத்தம் சதவீதம்மதுரவாயல் 1,27,220 1,20,412 4 2,47,636 57.83அம்பத்துார் 1,10,831 1,05,061 2 2,15,894 60.37ஆலந்துார் 1,13,497 1,10,489 40 2,24,026 57.81ஸ்ரீபெரும்புதுார் 1,35,336 1,34,541 10 2,69,887 70.54பல்லாவரம் 1,25,192 1,20,541 2 2,45,735 57.09தாம்பரம் 1,17,785 1,15,061 1 2,32,847 58.34மொத்தம் 7,29,861 7,06,105 59 14,36,025 60.21



ஓட்டு எண்ணும் மையம் 'சீல்'


ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதிக்கான ஓட்டு எண்ணும் மையம், சென்னை குரோம்பேட்டை எம்.ஐ.டி., கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ளது.இம்மையத்தில், பல்லாவரம், தாம்பரம் ஆகிய சட்டசபை தொதிகளுக்கு தரை தளத்திலும், மதுரவாயல், அம்பத்துார், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு முதல் தளத்திலும், ஆலந்துார் சட்டசபை தொகுதிக்கு இரண்டாம் தளத்திலும், ஓட்டு எண்ணும் மையங்கள் உள்ளன.
இந்த ஆறு சட்டசபை தொகுதியிலும், ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு முடிந்து, நேற்று முன்தினம் இரவு 9:00 முதல் நேற்று காலை 8:00 மணி வரை, வாகனங்கள் வாயிலாக ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஓட்டு எண்ணும் மையத்திற்கு கொண்டுவரப்பட்டன.ஒரு சட்டசபை தொகுதிக்கு, ஓட்டுப்பதிவு இயந்திரம் மற்றும் பொருட்கள் வைக்க, தலா ஒரு ஸ்ட்ராங்க் ரூம் என, இரு இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.ஆறு சட்டசபை தொகுதிகளுக்கும், 12 ஸ்டராங்க் ரூம்களில், 4,874 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், வி.வி.பேட் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து, ஓட்டு எண்ணும் மையத்திற்கு, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகளை, அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான அருண்ராஜ், ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதி பொது பார்வையாளர் அபிஷேக் சந்திரா ஆகியோர், நேற்று பூட்டி 'சீல்' வைத்தனர்.



நான்கு அடுக்கு பாதுகாப்பு


ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஓட்டு எண்ணும் மையமான குரோம்பேட்டை எம்.ஐ.டி., கல்லுாரியில், வளாகம், நுழைவாயில், தரைதளம், முதல் தளம், இரண்டாம் தளம் என, 300 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுகிறது. இதற்காக, டி.வி., திரைகள் அமைக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது.ஓட்டு எண்ணும் மையத்தில், நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் எல்லை பாதுகாப்பு படையினர் 13 பேர் மற்றும் நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டும் இன்றி, தாசில்தார் தலைமையில், மூன்று வருவாய்த்துறை ஊழியர்களும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.








      Dinamalar
      Follow us