ADDED : மே 20, 2024 09:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கனகம்மாசத்திரம்: சென்னையில் இருந்து திருப்பதிக்கு தினசரி செய்தித்தாள்கள் வாகனம் வாயிலாக அனுப்பப்படுகிறது. நேற்று அதிகாலை திருப்பதிக்கு மாருதி இகோ வாகனத்தில் ஆங்கில செய்தித்தாள்கள் அனுப்பப்பட்டன.
அதிகாலை, 4:30 மணியளவில் சென்னை --திருப்பதி தேசிய நெடுஞ்சாலை கனகம்மாசத்திரம் அடுத்த நெடும்பரம் அருகே வந்த போது முன் சென்ற லாரியை முந்தியது.
அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார்.
கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

