/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டுகோள்
/
கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டுகோள்
ADDED : ஏப் 23, 2024 05:03 AM
திருப்போரூர் : திருப்போரூர் அடுத்த பூண்டி கிராமத்தில், கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இக்கிராமத்தை சுற்றிலும், ராயமங்கலம், முள்ளிப்பாக்கம், எடர்குன்றம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. விவசாயிகள் அதிகளவில் கால்நடைகள் வளர்த்து வருகின்றனர்.
தங்களது கால்நடைகள் நோய் தாக்குதலுக்கு உள்ளானால், மருத்துவ ஆலோசனை பெற மானாமதி, கரும்பாக்கம் பகுதிகளில் உள்ள கால்நடை மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டியுள்ளது.
இதனால், உடனுக்குடன் சிகிச்சை பெற முடியாத நிலை உள்ளது.
எனவே, சுற்றுப்புற பகுதி விவசாயிகளின் நலன் கருதி, பூண்டி கிராமத்தில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.

