sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

புறவழி சாலையால் விபத்து அபாயம் படூரில் மேம்பாலம் அவசியம்

/

புறவழி சாலையால் விபத்து அபாயம் படூரில் மேம்பாலம் அவசியம்

புறவழி சாலையால் விபத்து அபாயம் படூரில் மேம்பாலம் அவசியம்

புறவழி சாலையால் விபத்து அபாயம் படூரில் மேம்பாலம் அவசியம்


ADDED : மார் 02, 2025 11:22 PM

Google News

ADDED : மார் 02, 2025 11:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர், படூரில், பிரதான சாலையின் குறுக்கே புறவழிச்சாலை செல்வதால், மக்கள் அச்சத்துடன் சாலையைக் கடக்கின்றனர். இதனால், அங்கு மேம்பாலம் அமைக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஓ.எம்.ஆர்., சாலை எனப்படும் ராஜிவ்காந்தி சாலை சென்னை, மத்திய கைலாஷ் பகுதியில் இருந்து சிறுசேரி சிப்காட் வரை, ஆறு வழிப்பாதையாக உள்ளது.

சிறுசேரியில் இருந்து பூஞ்சேரி வரை, நான்கு வழிப் பாதையாக உள்ளது.

இதில் படூர், கேளம்பாக்கம் பகுதியிலும், திருப்போரூர் பகுதியிலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால், இங்கு ஆறுவழிச் சாலையாக புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.

தற்போது, படூர் -- தையூர் இடையிலான புறவழிச்சாலை 4.67 கி.மீ., துாரத்திற்கு அமைக்கப்பட்டு வருகிறது. திருப்போரூர் -- ஆலத்துார் இடையிலான புறவழிச் சாலை 7.45 கி.மீ., துாரத்திற்கு அமைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், படூர் ஓ.எம்.ஆர்., சாலையிலிருந்து ஊருக்குள் செல்லும் பிரதான சாலையின் குறுக்கே தான், மேற்கண்ட படூர் புறவழிச்சாலை செல்கிறது.

பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், பணிக்குச் செல்வோர் என அனைவரும், பிரதான சாலை வழியாக வந்து, ஓ.எம்.ஆர்., சாலையை அடைகின்றனர்.

ஆனால், இந்த பிரதான சாலையின் குறுக்கே புறவழிச்சாலை செல்வதால், மக்கள் அச்சத்துடன் சாலையைக் கடந்து செல்கின்றனர்.

எனவே, படூரில் விபத்தை தடுக்க, மக்களின் பாதுகாப்பு கருதி, படூர் புறவழிச்சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us