sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ஓட்டு மிஸ்ஸிங் ஆன 32,000 பேருக்கு வாக்காளர் அட்டை வழங்க முகாம்

/

ஓட்டு மிஸ்ஸிங் ஆன 32,000 பேருக்கு வாக்காளர் அட்டை வழங்க முகாம்

ஓட்டு மிஸ்ஸிங் ஆன 32,000 பேருக்கு வாக்காளர் அட்டை வழங்க முகாம்

ஓட்டு மிஸ்ஸிங் ஆன 32,000 பேருக்கு வாக்காளர் அட்டை வழங்க முகாம்


ADDED : ஜூன் 14, 2024 12:22 AM

Google News

ADDED : ஜூன் 14, 2024 12:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:பெரும்பாக்கம் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், 50,000க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், 18,000 வாக்காளர்களுக்கு மட்டுமே ஓட்டு இருந்தது. மீதமுள்ள, 32,000 பேருக்கு ஓட்டு இல்லை.

இங்கு வசிப்போர் மறுக்குடியமர்வு செய்யப்பட்டபோது, ஏற்கனவே வசித்த பகுதியில் இருந்த வாக்காளர் பட்டியலில் இருந்து, அவர்களது பெயர்கள் நீக்கப்பட்டன.

இதனால், அவர்களால் எங்கும் ஓட்டளிக்க முடியவில்லை.

இது குறித்து, நம் நாளிதழில், ஏப்., மாதம் விரிவாக செய்தி வெளியானது.

இதையடுத்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, செங்கல்பட்டு மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்டார்.

தேர்தல் முடிந்ததும், விடுபட்ட அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என,அதிகாரிகள் கூறினர்.

இந்நிலையில் பெரும்பாக்கம், 9வது குடியிருப்பு வளாகத்தில், வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம், இன்றும் நாளையும் நடத்தப்படுகிறது.

மேலும், குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட சேவைகளுக்கும், சம்பந்தப்பட்ட துறைகள் வர உள்ளன என, வாரிய அதிகாரிகள் கூறினர்.






      Dinamalar
      Follow us