sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

விடுபட்ட பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் தாம்பரத்தில் கலெக்டர் ஆலோசனை கூட்டம்

/

விடுபட்ட பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் தாம்பரத்தில் கலெக்டர் ஆலோசனை கூட்டம்

விடுபட்ட பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் தாம்பரத்தில் கலெக்டர் ஆலோசனை கூட்டம்

விடுபட்ட பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் தாம்பரத்தில் கலெக்டர் ஆலோசனை கூட்டம்


ADDED : செப் 12, 2024 08:42 PM

Google News

ADDED : செப் 12, 2024 08:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம்:தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள திருநீர்மலை, சிட்லப்பாக்கம், பெருங்களத்துார், பீர்க்கன்காரணை, மாடம்பாக்கம் மற்றும் புதியதாக இணையவுள்ள முடிச்சூர், அகரம்தென், மதுரப்பாக்கம் உள்ளிட்ட 15 ஊராட்சிகளில், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

அவற்றுடன், நந்திவரம்- கூடுவாஞ்சேரி மற்றும் அதை ஒட்டியுள்ள 10 ஊராட்சிகளிலும், பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், தாம்பரம் மாநகராட்சியில், நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில், தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர், பல்லாவரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., கருணாநிதி மற்றும் அந்தந்த பகுதிகளை சார்ந்த குடியிருப்போர் நலச்சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள் பங்கேற்று, தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். தொடர்ந்து, பாதாள சாக்கடை திட்டம் குறித்து, திரையின் வாயிலாக விளக்கப்பட்டது.

இதில், கலெக்டர் அருண்ராஜ் பேசியதாவது:

ஆலோசனை கூட்டத்தில், பல வகையான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. பலர், புரிதலுடன் எங்கு பிரச்னை நடக்கிறது என்பதை சரியாக எடுத்து கூறினர்.

மக்களின் கருத்துக்களை திட்ட ஆலோசகர்கள் ஏற்று, முடிந்த வரை சரிசெய்து செயல்படுத்தப்படும். மக்கள் தெரிவித்த கருத்துக்களை சேர்த்து, அரசுக்கு அனுப்பப்படும்.

அதன் அடிப்படையில், எப்படி செயல்படுத்துவது மற்றும் நிதி அளிப்பது குறித்து, அரசுடன் ஆலோசனை முடிந்த பின், இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.






      Dinamalar
      Follow us