sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

அறநிலையத்துறை கையகப்படுத்திய கோவிலில் பூஜைகள் நடைபெறாததால் பக்தர்கள் அதிருப்தி

/

அறநிலையத்துறை கையகப்படுத்திய கோவிலில் பூஜைகள் நடைபெறாததால் பக்தர்கள் அதிருப்தி

அறநிலையத்துறை கையகப்படுத்திய கோவிலில் பூஜைகள் நடைபெறாததால் பக்தர்கள் அதிருப்தி

அறநிலையத்துறை கையகப்படுத்திய கோவிலில் பூஜைகள் நடைபெறாததால் பக்தர்கள் அதிருப்தி


ADDED : மே 18, 2024 12:24 AM

Google News

ADDED : மே 18, 2024 12:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சி பிரியா நகரில், நவசக்தி விநாயகர் கோவில் கட்டப்பட்டு, அதை நலச்சங்க நிர்வாகிகள் பராமரித்து வந்தனர்.

இந்நிலையில், அபிராமி நகர் பகுதியை சேர்ந்த கவிதா என்பவர், நலச்சங்க நிர்வாகத்தில் நிர்வாகியாக இருந்து, கோவில் பணிகளை கவனித்து வந்தார்.

இந்நிலையில், கோவில் வருமானம் தொடர்பான கணக்கு வழக்குகளை சரியாக காட்டாததால், கவிதாவுக்கும் நலச்சங்க நிர்வாகிகளுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து, கவிதாவை நலச்சங்க நிர்வாகிகள் ஒன்றிணைந்து, நிர்வாக பொறுப்பிலிருந்து வெளியேற்றினர். இதில் ஆத்திரம் அடைந்த கவிதா, இது குறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து பேசினர்.

ஆனால், அப்போதும் வரவு - செலவு கணக்கை ஒப்படைக்க விரும்பாத கவிதா, சென்னை உயர் நீதிமன்றத்தில், கடந்த வருடம், அக்டோபரில் ரிட் மனு தாக்கல் செய்தார்.

அதில், கோவிலுக்கு அதிக அளவில் வருமானம் வருவதாகவும், நலச்சங்க நிர்வாகிகள் மோசடியில் ஈடுபடுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து, ஹிந்து அறநிலையத் துறை அதிகாரிகள் விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் விசாரணையில், கோவிலுக்கு எந்த விதமான வருமானமும் இல்லை; எந்த விதமான சொத்துக்களும் இல்லை என்பது தெரிய வந்தது.

தவறான தகவல் தெரிவித்த கவிதாவையும், நலச்சங்க நிர்வாகிகளையும் அழைத்து விசாரித்த ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், அவர்களுக்குள் சமரசம் ஏற்படுத்த முயன்றனர்.

ஆனால், அதில் சமரசம் ஏற்படாததால், 25 வருட பராமரிப்பில் உள்ள கோவிலை, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கடந்த பிப்ரவரியில், தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்தனர்.

அன்று முதல், தொடர்ந்து கோவிலில் முறையான பூஜைகள் நடைபெறவில்லை என பக்தர்கள் அதிருப்தி அடைந்தனர்.

பக்தர்கள் கூறியதாவது:

பிரியா நகர் பகுதியில், நவசக்தி விநாயகர் கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. அன்று முதல், கோவில் உரிய பராமரிப்பு இல்லாமல், பூஜைகள் நடைபெற வில்லை.

எனவே, அனைத்து பூஜைகளும் சிறப்பாக நடைபெற, அறங்காவலர் குழு அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us