sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

தாலுகா அலுவலகம் எதிரில் வடிகால்வாய் பணி துவக்கம்

/

தாலுகா அலுவலகம் எதிரில் வடிகால்வாய் பணி துவக்கம்

தாலுகா அலுவலகம் எதிரில் வடிகால்வாய் பணி துவக்கம்

தாலுகா அலுவலகம் எதிரில் வடிகால்வாய் பணி துவக்கம்


ADDED : செப் 08, 2024 12:22 AM

Google News

ADDED : செப் 08, 2024 12:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி:நந்திவரத்தில் உள்ள வண்டலூர் தாலுகா அலுவலகம் எதிரில் உள்ள சாலையில், புதிய மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.

மழை காலங்களில் பாரி தெரு, என்.எஸ்.கே.தெரு, முத்து மாரியம்மன் கோவில் தெரு, காமராஜபுரம் போன்ற பகுதியிலிருந்து, வரும் மழைநீர் செல்ல முடியாமல், சாலைகளில் தேங்குவதால், அப்பகுதியினர் கடும் அவதிப்பட்டு வந்தனர்.

இதை தொடர்ந்து, பாரி தெரு, என்.எஸ்.கே.தெரு, முத்துமாரியம்மன் கோவில் தெரு, காமராஜபுரம் ஆகிய பகுதிகளில், ஏற்கனவே இருந்த மழைநீர் வடிகால்வாயை துர்வாரி, அகலப்படுத்தும் பணி சில நாட்களுக்கு முன் நிறைவடைந்தது.

வண்டலூர் தாலுகா அலுவலகம் எதிரில் உள்ள சாலையில், நந்திவரம் அரசு மருத்துவமனை சுற்றுச்சுவரை ஒட்டி, 27 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.

காமராஜபுரத்தில் இருந்து வரும் மழை நீரை, புதிய கால்வாயில் இணைத்து, பின், ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள மழைநீர் வடிகால்வாயுடன் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் ஒரு மாதத்திற்குள் நிறைவடையும் என, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us