/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கிளாம்பாக்கம் மாநகர பஸ் நிலையத்தில் ஆவின் பாலகம் அமைக்க எதிர்பார்ப்பு
/
கிளாம்பாக்கம் மாநகர பஸ் நிலையத்தில் ஆவின் பாலகம் அமைக்க எதிர்பார்ப்பு
கிளாம்பாக்கம் மாநகர பஸ் நிலையத்தில் ஆவின் பாலகம் அமைக்க எதிர்பார்ப்பு
கிளாம்பாக்கம் மாநகர பஸ் நிலையத்தில் ஆவின் பாலகம் அமைக்க எதிர்பார்ப்பு
ADDED : ஆக 06, 2024 12:48 AM
கூடுவாஞ்சேரி:கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து, தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணியர், அரசு மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகளில் பயணிக்கின்றனர்.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு வரும் பயணியர், மாநகர பேருந்துகளையே அதிகமாக பயன்படுத்துகின்றனர்.
அவ்வாறு வரும் பயணியர், தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்தும், வண்டலுார், ஊரப்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்தும், மாநகர பேருந்து வாயிலாக, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வருகின்றனர்.
கிளாம்பாக்கம் மாநகர பேருந்து நிலையத்தில் இறங்கி, அதன் பின் பேருந்து முனையத்திற்கு செல்கின்றனர். ஆனால், மாநகர பேருந்து நிலையத்தில் இறங்கும் பயணியர், அங்கு டீ கடை உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் ஏதுமின்றி அவதிப்படுகின்றனர்.
இது குறித்து, அங்கு வருகை தந்த பயணியர் கூறியதாவது:
தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணியர், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு வந்து, அங்கிருந்து பேருந்து வாயிலாக சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர்.
அவ்வாறு செல்வோர், மாநகர பேருந்து வாயிலாக கிளாம்பாக்கம் மாநகர பேருந்து நிலையத்தில் வந்து இறங்கி, பேருந்து முனையத்திற்கு செல்கின்றனர். இங்கு கடைகள் ஏதும் இல்லாததால், அத்தியாவசிய தேவைகளுக்கே சிரமப்படுகிறோம்.
எனவே, மாநகர பேருந்து நிலைய வளாகத்தில், டீ கடை மற்றும் ஆவின் பாலகம் உள்ளிட்ட அடிப்படை உணவு தேவையை பூர்த்தி செய்யும் கடைகளை அமைக்க வேண்டும்.
எனவே, கிளாம்பாக்கம் மாநகர பேருந்து நிலையத்தில், ஆவின் பாலகம் மற்றும் டீ கடைகள் அமைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.