sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மேல்வசலை சாலை வளைவில் வேகத்தடை அமைக்க எதிர்பார்ப்பு

/

மேல்வசலை சாலை வளைவில் வேகத்தடை அமைக்க எதிர்பார்ப்பு

மேல்வசலை சாலை வளைவில் வேகத்தடை அமைக்க எதிர்பார்ப்பு

மேல்வசலை சாலை வளைவில் வேகத்தடை அமைக்க எதிர்பார்ப்பு


ADDED : ஜூலை 21, 2024 06:25 AM

Google News

ADDED : ஜூலை 21, 2024 06:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்தாமூர்: சித்தாமூர் அடுத்த மேல்வசலை கிராமத்தில், நீர்பெயர் - வேட்டூர் செல்லும் 8 கி.மீ., மாநில நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையை, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர். தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.

மேல்வசலை கிராமத்தில் உள்ள மலைப்பகுதியில், அபாயகரமான சாலை வளைவு உள்ளது. இப்பகுதியில் வேகத்தடை இல்லாததால், வேகமாக வரும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வரும் வாகனங்கள் மீது மோதி விபத்தில் சிக்குகின்றன.

இதனால், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்துடன் சாலை வளைவு பகுதியை கடந்து செல்கின்றனர்.

எனவே, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலை வளைவு பகுதியில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில், வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us