ADDED : ஏப் 07, 2024 12:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லாவரம்:தாம்பரம் மாநகராட்சி, பழைய பல்லாவரம், பன்னீர் செல்வம் சாலையில், பழுதான குப்பை லாரி ஒன்று, ஒரு மாதமாக நிறுத்தப்பட்டிருந்தது.
அவ்வழியாக செல்லும் மக்கள், லாரியின் மேற் பகுதியிலும், கீழ் பகுதியிலும் குப்பை கழிவுகளை வீசி செல்வது வாடிக்கையானது. இந்த நிலையில், நேற்று மதியம், லாரி திடீரென தீ பிடித்து எரிந்தது. தீயணைப்பு துறையின் விரைந்து, தீயை அணைத்தனர். இதில், லாரியின் டயர் மற்றும் குப்பை கழிவுகள் எரிந்தன.
மேலும், அருகில் உள்ள காலி மனையில் தேங்கிய குப்பையிலும் தீ பரவியது. தீ பிடித்து எரிந்த லாரியை, அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

