sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சாலை ஓரம் எரிக்கப்படும் குப்பை கழிவுகளால் ஆபத்து

/

சாலை ஓரம் எரிக்கப்படும் குப்பை கழிவுகளால் ஆபத்து

சாலை ஓரம் எரிக்கப்படும் குப்பை கழிவுகளால் ஆபத்து

சாலை ஓரம் எரிக்கப்படும் குப்பை கழிவுகளால் ஆபத்து


ADDED : ஏப் 08, 2024 11:40 PM

Google News

ADDED : ஏப் 08, 2024 11:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்: அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிப்பேட்டை ஊராட்சி, பிள்ளையார் கோவில் தெரு செல்லும் சாலை ஓரம், பைபாஸ் பேருந்து நிறுத்தம் பகுதியில், ஊராட்சி சார்பாக குப்பைத்தொட்டி வைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், சாலை ஓரம் கடை வைத்துள்ளவர்கள் மற்றும் பொதுமக்கள் தொட்டியில் குப்பையை கொட்டுவதில்லை.

புறவழிச்சாலை ஓரம், கோழி இறைச்சி கழிவுகள், குப்பை கழிவுகளை வீசி செல்கின்றனர். சில சமயங்களில், மர்ம நபர்கள் தீ வைத்து விடுகின்றனர்.

இதனால், அப்பகுதியைகடக்கும் வாகன ஓட்டிகள், பேருந்துக்காக காத்தி ருக்கும் பொதுமக்கள் மூச்சுத்திணறல், சுவாசப்பிரச்னைகளால் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

மேலும், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்து செல்லும் கனரக வாகனங்கள், வைக்கோல் கட்டு ஏற்றிச் செல்லும்வாகனங்கள், எரியும்குப்பையிலிருந்து பறக்கும் தீப்பொறியால் விபத்தை சந்திக்கும் ஆபத்துஉள்ளது.

எனவே, குப்பையை முறையாக அகற்ற, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us