sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

குளத்தில் கலக்கும் கழிவுநீரால் கொசு தொல்லை அதிகரிப்பு

/

குளத்தில் கலக்கும் கழிவுநீரால் கொசு தொல்லை அதிகரிப்பு

குளத்தில் கலக்கும் கழிவுநீரால் கொசு தொல்லை அதிகரிப்பு

குளத்தில் கலக்கும் கழிவுநீரால் கொசு தொல்லை அதிகரிப்பு


ADDED : ஆக 26, 2024 01:49 AM

Google News

ADDED : ஆக 26, 2024 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாடம்பாக்கம்:தாம்பரம் மாநகராட்சி, 5வது மண்டலம், மாடம்பாக்கம் மேற்கு மாடவீதி, இரண்டாவது சந்து வழியாக மழைநீர் கால்வாய் செல்கிறது.

அருகேயுள்ள தேனுபுரீஸ்வரர் கோவில் குளத்தை, இக்கால்வாய் இணைப்பதால், மழைக்காலத்தில், சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வெளியேறும் வெள்ளம், இதன் வழியாக கோவில் குளத்திற்கு செல்லும்.

மழைநீர் மட்டுமே சென்றுக் கொண்டிருந்த இக்கால்வாயில், சமீபகாலமாக கழிவுநீர் ஓடுகிறது.

தனுஷா நகர் மற்றும் சுற்றியுள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், இக்கால்வாயில் கலந்து, மேற்கு மாடவீதியை கடந்து காலி மனையில் தேங்குகிறது. இதனால், கொசு தொல்லை அதிகரித்து, பல்வேறு தொற்று நோய்கள் பரவுகின்றன.

இது குறித்து, மாநகராட்சியில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. திடீரென மழை பெய்தால், காலி மனையில் தேங்கியுள்ள கழிவுநீர், கோவில் குளத்திற்கு சென்றுவிடும்.

குளத்திற்கு செல்லும் கால்வாயில் கழிவுநீர் கலப்பதையும், மக்கள் பாதிக்கப்படுவதையும், மாநகராட்சி தடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us