/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மச்சினிக்கு அவதுாறு 'மெசேஜ்' மாமா கைது
/
மச்சினிக்கு அவதுாறு 'மெசேஜ்' மாமா கைது
ADDED : ஜூன் 17, 2024 03:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : சென்னை, திரு.வி.க., நகர், காமராஜர் நகரைச் சேர்ந்தவர் ஜெயஸ்ரீ, 20.
இவரது அக்கா ஜெயசந்தியா என்பவருக்கு, கடந்தாண்டு யுவராஜ், 29, என்பவருடன் திருமணமான நிலையில், கடந்த ஐந்து மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், அக்கா கணவர் யுவராஜ், ஜெயஸ்ரீயின் மொபைல்போன் எண்ணுக்கு, அவரது குடும்பத்தினர் குறித்து அவதுாறாக குறுஞ்செய்தி அனுப்பி மிரட்டி வந்துள்ளார்.
புகாரின்படி விசாரித்ததிரு.வி.க., நகர் போலீசார், உத்தண்டி, நயினார்குப்பத்தைச் சேர்ந்த யுவராஜை கைது செய்தனர்.