sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மின் பிரச்னைக்கு உடனடி தீர்வு அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு

/

மின் பிரச்னைக்கு உடனடி தீர்வு அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு

மின் பிரச்னைக்கு உடனடி தீர்வு அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு

மின் பிரச்னைக்கு உடனடி தீர்வு அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு


ADDED : ஜூலை 30, 2024 11:03 PM

Google News

ADDED : ஜூலை 30, 2024 11:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மற்றும் பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் கூட்டம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்ரபசன் தலைமையில், நேற்று நடந்தது.

இதில், இலவச வீட்டுமனை பட்டா, மின் அழுத்த குறைபாடு, மின் கம்பங்கள் மாற்றம், மின்மாற்றிகள் மாற்றம், வேலை வாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய, 453 மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க, அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். அதன்பின், அமைச்சர் அன்பரசன் பேசியதாவது:

செங்கல்பட்டு மாவட்டத்தில், மின் அழுத்த குறைபாடு, மின் கம்பங்கள் மாற்றம் கோரி, அதிகமான மனுக்கள் வந்துள்ளன. இப்பிரச்னைக்களுக்கு உடனடியாக தீர்வு காண, மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிராமங்களுக்கு செல்வதில்லை என்பது தெரிகிறது. கிராமங்களுக்கு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சென்று, மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். அனைத்து துறை அதிகாரிகளும் இணைந்து செயல்பட்டு, மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us