sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மாமல்லபுரம், கோவளம், செங்கல்பட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க எம்.டி.சி., ஆய்வு

/

மாமல்லபுரம், கோவளம், செங்கல்பட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க எம்.டி.சி., ஆய்வு

மாமல்லபுரம், கோவளம், செங்கல்பட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க எம்.டி.சி., ஆய்வு

மாமல்லபுரம், கோவளம், செங்கல்பட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க எம்.டி.சி., ஆய்வு


ADDED : ஆக 11, 2024 05:36 AM

Google News

ADDED : ஆக 11, 2024 05:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தில் இயக்கப்படும், 3,000க்கும் மேற்பட்ட மாநகரப் பேருந்துகளில் தினமும் 32 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர்.

சென்னையின் எல்லைப் பகுதி, நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், செங்கல்பட்டு, மாமல்லபுரம், திருவள்ளூர் என, புறநகர் பகுதிகளுக்கும், மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

எனினும், போதிய மாநகரப் பேருந்துகள் இயக்காததால், பயணியர் பாதிக்கப்படுகின்றனர்.

இதுகுறித்து, பேருந்து பயணியர் கூறியதாவது:

சென்னை, புறநகர் பகுதிகளில், குடியிருப்புகள், தொழிற்சாலைகள், தனியார் அலுவலகங்கள் அதிகரித்து வருகின்றன. இருப்பினும், போதிய அளவில் பேருந்துகள் இயக்குவதில்லை.

தற்போது மின்சார ரயில்களின் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணியர் கடும் அவதிப்படுகின்றனர். போதிய அளவில் மாநகரப் பேருந்துகளை, அதன் நிர்வாகம் இயக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மாநகரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:

கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம் திறப்புக்கு பின், புறநகர் பகுதிகளில் கூடுதல் மாநகரப் பேருந்துகளை இயக்கி வருகிறோம்.

தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு 38 பேருந்துகள் 380 சர்வீஸ்களாகவும், மாமல்லபுரத்திற்கு 17 பேருந்துகள் 136 சர்வீஸ்களாகவும், கோவளத்துக்கு 14 பேருந்துகள் 112 சர்வீஸ்களாகவும் இயக்கி வருகிறோம்.

செங்கல்பட்டு தடத்தில் மின்சார ரயில்களின் சேவை, தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதால், நெரிசல் அதிகமாக ஏற்பட்டுள்ளது. இதற்காக, கூடுதல் பேருந்துகளை இயக்கி வருகிறோம்.

இதற்கிடையே, காலை மற்றும் அலுவலக நேரங்களில் பயணியரின் தேவைக்கு ஏற்ப, எந்தெந்த தடங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்கலாம் எனவும் ஆய்வு செய்கிறோம். புதிய பேருந்துகள் வரும்போது, இந்த அறிக்கையின்படி, கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us