/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நந்திவரம் மகாலட்சுமி நகரில் படுமோசமான சாலையால் அவதி
/
நந்திவரம் மகாலட்சுமி நகரில் படுமோசமான சாலையால் அவதி
நந்திவரம் மகாலட்சுமி நகரில் படுமோசமான சாலையால் அவதி
நந்திவரம் மகாலட்சுமி நகரில் படுமோசமான சாலையால் அவதி
ADDED : மே 18, 2024 12:22 AM

கூடுவாஞ்சேரி:நந்திவரம், மஹாலட்சுமி நகர் பிரதான சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, மேடும் பள்ளமுமாக, போக்குவரத்திற்கு லாயக்கற்ற முறையில் உள்ளது.
இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி., சாலை அருகில், நந்திவரம், மஹாலட்சுமி நகர் பிரதான சாலை உள்ளது. இந்த சாலையை சுற்றி, அதிக அளவிலான குடியிருப்புகள் உள்ளன.
மேலும், இந்த சாலையை கடந்து தான், உதயசூரியன் நகர், ஜெயலட்சுமி நகர், மஹாலட்சுமி நகர் விரிவு, அம்சா நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு, பொதுமக்கள் செல்கின்றனர்.
மஹாலட்சுமி நகர் பிரதான சாலையையே, அதிக அளவிலான வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை, தற்போது போக்குவரத்திற்கு லாயக்கற்ற முறையில் உள்ளது.
சாலையை சீரமைக்க வேண்டி, நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, சேதமாகியுள்ள சாலையை சீரமைத்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர, நகராட்சி நிர்வாகம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

