/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நல்லாமூர் சுகாதார நிலையத்திற்கு ரூ.1.23 கோடியில் புதிய கட்டடம்
/
நல்லாமூர் சுகாதார நிலையத்திற்கு ரூ.1.23 கோடியில் புதிய கட்டடம்
நல்லாமூர் சுகாதார நிலையத்திற்கு ரூ.1.23 கோடியில் புதிய கட்டடம்
நல்லாமூர் சுகாதார நிலையத்திற்கு ரூ.1.23 கோடியில் புதிய கட்டடம்
ADDED : செப் 11, 2024 12:38 AM

சித்தாமூர்:சித்தாமூர் அருகே, நல்லாமூர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. கொளத்துார், கோட்டிவாக்கம், நல்லாமூர், கீழ்கரணை என, 20க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு, இது பிரதான அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக உள்ளது.
தினசரி, குழந்தைகள், முதியோர், கர்ப்பிணியர் என, நுாற்றுக்கணக்கான புறநோயாளிகள், இங்கு வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழைய கட்டடத்தில், தற்போது செயல்பட்டு வருகிறது.
போதிய இடவசதி இல்லாததால், நோயாளிகள் மற்றும் செவிலியர்கள் அவதிப்பட்டு வந்தனர். அதனால், புதிய கட்டடம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
இந்நிலையில், ஊரக வளர்ச்சித் துறை சார்பாக, 1.23 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 4,050 சதுர அடி பரப்பளவில், புறநோயாளிகளுக்கு புதிய கட்டடம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, கடந்த ஜன., மாதம் பணிகள் துவங்கப்பட்டன.
தற்போது, 70 சதவீத கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், மூன்று மாதங்களில் கட்டுமானப் பணிகள் முழுதும் முடிந்து, பயன்பாட்டிற்கு வரும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.