sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கரும்பாக்கத்தில் 30 ஆண்டுக்கு பின் ரூ.20 லட்சத்தில் புதிய தார் சாலை

/

கரும்பாக்கத்தில் 30 ஆண்டுக்கு பின் ரூ.20 லட்சத்தில் புதிய தார் சாலை

கரும்பாக்கத்தில் 30 ஆண்டுக்கு பின் ரூ.20 லட்சத்தில் புதிய தார் சாலை

கரும்பாக்கத்தில் 30 ஆண்டுக்கு பின் ரூ.20 லட்சத்தில் புதிய தார் சாலை


ADDED : ஜூன் 18, 2024 11:52 PM

Google News

ADDED : ஜூன் 18, 2024 11:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த கரும்பாக்கம் ஊராட்சி, இரண்டாவது வார்டு முத்துமாரியம்மன் கோவில் தெரு, மாதா கோவில் தெருவில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

இங்குள்ள சாலையில், அப்பகுதிவாசிகள் சிலர் சுற்றுச்சுவரும், தடுப்பு வேலியும் அமைத்து, சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

அதனால், புதிய சாலை அமைக்கும் பணி, 30 ஆண்டுகளாக தடைபட்டிருந்தது. இதனால், குண்டும் குழியுமான சாலையில், அப்பகுதிவாசிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

அதனால், இங்கு புதிய சாலை அமைக்கக்கோரி, இரண்டாவது வார்டு கவுன்சிலர் கோவிந்தராஜ், ஒன்றிய நிர்வாகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

இதையடுத்து, பல்வேறு கருத்து வேறுபாட்டிற்கு பின், மக்கள் ஒத்துழைப்புடன் சாலை அமைக்க முடிவு எடுக்கப்பட்டது.தொடர்ந்து, பிரதம மந்திரி சாலை திட்டத்தின் கீழ், 3.5 மீட்டர் அகலம், 500 மீட்டர் நீளத்தில், 20 லட்சம் ரூபாய் மதிப்பில், தார் சாலை அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:

இங்கு சாலை அமைக்க கோரிக்கை இருந்தது. எனினும், சிலர் சாலையை ஒட்டி ஆக்கிரமித்து சுற்றுச்சுவர், தடுப்பு வேலி அமைத்திருந்தனர். அவர்கள் அவற்றை அகற்ற மறுத்து, சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்ததால், சாலை அமைக்கும் பணி தடைபட்டது.

வருவாய்த்துறை அளவீடு செய்து, பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னும், சாலை அமைக்க அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்தனர். இதனால், சாலை அமைக்கும் பணி துவங்கப்பட்டு நடந்து வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us