sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மொபைல் போன் சிக்னல் இல்லை குமுறும் குமுளி ஊராட்சி மக்கள்

/

மொபைல் போன் சிக்னல் இல்லை குமுறும் குமுளி ஊராட்சி மக்கள்

மொபைல் போன் சிக்னல் இல்லை குமுறும் குமுளி ஊராட்சி மக்கள்

மொபைல் போன் சிக்னல் இல்லை குமுறும் குமுளி ஊராட்சி மக்கள்


ADDED : பிப் 22, 2025 11:43 PM

Google News

ADDED : பிப் 22, 2025 11:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி,கூடுவாஞ்சேரி அடுத்த குமுளி ஊராட்சியில், மொபைல் போன் சிக்னல் முறையாக இல்லாததால், பகுதிவாசிகள், பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாது ஊராட்சி நிர்வாகமும் பெரும் சிக்கலில் தவித்து வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியத்திற்குட்பட்டது குமுளி ஊராட்சி. இங்கு ஒன்பது வார்டுகள் உள்ளன. கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 3,487 நபர்கள் வசிக்கின்றனர்.

கிராமிய மணத்துடன் திகழும் குமுளி ஊராட்சியில், பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரமாக வேளாண் தொழில் உள்ளது.

இந்த ஊராட்சியில், மொபைல் போன் சிக்னல்கள் முறையாக இல்லை. இதனால், கல்லுாரி மாணவர்கள் இணைய சேவையைப் பயன்படுத்த முடியவில்லை. தவிர, வரி வசூல் உள்ளிட்ட அலுவலகப் பணியை துரிதமாக செய்ய முடியாமல் ஊராட்சி நிர்வாகம் தத்தளிக்கிறது.

பகுதிவாசிகள் கூறியதாவது:

ஊராட்சியில் 90 சதவீதம் பேர் மொபைல் போன் பயன்படுத்தி வந்தாலும், வீட்டின் மாடியிலோ அல்லது ஊரைவிட்டு வெளியேறி, பிரதான சாலைக்கு சென்றால் மட்டுமே சிக்னல் கிடைக்கிறது.

நகரங்களில் ஐந்தாம் அலைவரிசையில் மொபைல் போன் சேவை கிடைக்கும்போது, இரண்டாம் அலைவரிசை சேவையைக்கூட பெற முடியாமல் மிகுந்த இன்னல்களை சந்திக்கிறோம்.

அவசர காலங்களில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களை தொடர்பு கொள்ள பெரும் இடையூறு ஏற்படுகிறது. எனவே, குமுளி ஊராட்சியில் மொபைல் போன் சிக்னல் கிடைக்க, சம்பந்தப்பட்ட மொபைல் அலைவரிசை நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us