ADDED : ஏப் 16, 2024 06:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடுவாஞ்சேரி: கன்னியாகுமரி மாவட்டம், பள்ளிபாடியைச் சேர்ந்தவர் பிரசன்னா ராஜ், 60. இவர், கூடுவாஞ்சேரியில் தங்கி, சென்னையில் உள்ள ஒரு தனியார்கடையில் பணிபுரிந்துவந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து, வீடு திரும்பு வதற்காக மின்சார ரயிலில், கூடுவாஞ்சேரி நிலையத்தில் இறங்கி, தண்டவாளத்தை கடந்த போது, தாம்பரத்தில் இருந்துசெங்கல்பட்டு நோக்கி வந்த மின்சார ரயிலில்அடிபட்டு, சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த தாம்பரம் ரயில்வே போலீசார், நேற்று காலை உடலை மீட்டு, தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து,வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

