ADDED : ஆக 28, 2024 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், குறைந்த விலையில் மருந்துகள் வாங்க, மத்திய அரசு திட்டமான, 'மக்கள் மருந்தகம்' திறக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், பெரும்பாக்கம், நுாக்கம்பாளையம் இணைப்பு சாலை, நேதாஜி நகரில் மக்கள் மருந்தகம் திறக்கப்பட்டது. இங்கு, இதர கடைகளில் வாங்குவதை விட, 30 முதல் 90 சதவீதம் சலுகை விலையில் மருந்துகள் விற்கப்படுகின்றன.