sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வரும் 25ல் தபால் சேவை குறை தீர்வு கூட்டம்

/

வரும் 25ல் தபால் சேவை குறை தீர்வு கூட்டம்

வரும் 25ல் தபால் சேவை குறை தீர்வு கூட்டம்

வரும் 25ல் தபால் சேவை குறை தீர்வு கூட்டம்


ADDED : மார் 14, 2025 10:54 PM

Google News

ADDED : மார் 14, 2025 10:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டில், கோட்ட அளவிலான தபால் சேவை குறைதீர்க்கும் கூட்டம், வரும் 25ம் தேதி நடக்கிறது.

அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சண்முகச்சாமி அறிக்கை:

செங்கல்பட்டு வரதனார் தெருவில் உள்ள செங்கல்பட்டு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், கோட்ட அளவிலான தபால் சேவை குறை தீர்க்கும் கூட்டம், வரும் 25ம் தேதி மாலை 3:00 மணிக்கு நடக்கிறது.

இந்த கூட்டத்தில், தபால் சம்பந்தப்பட்ட புகார் எனில், தபால் அனுப்பப்பட்ட தேதி மற்றும் நேரம், அனுப்பியவர், பெறுபவரின் முகவரி, ரசீது எண், பணவிடை, துரித தபால், பதிவு தபால் ஆகியவற்றுக்கான விவரங்களை குறிப்பிட்டிருக்க வேண்டும்.

சேமிப்பு வங்கி, அஞ்சல் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீடு சம்பந்தமாக புகார் எனில், கணக்கு எண், கணக்கு வைத்திருப்பவரின் பெயர் மற்றும் முகவரி, பாலிசிதாரரின் பெயர் மற்றும் முழு முகவரி, பணம் கட்டிய முழு விவரம், பணம் செலுத்திய அலுவலகத்தின் பெயர், அஞ்சல் துறை சம்பந்தப்பட்ட கடித தொடர்புகள் இருந்தால், புகாருடன் இணைக்க வேண்டும். குறைகளை 22ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us