sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வண்டலுார் ரயில் தண்டவாளத்தில் பாதையை அடைக்க எதிர்ப்பு

/

வண்டலுார் ரயில் தண்டவாளத்தில் பாதையை அடைக்க எதிர்ப்பு

வண்டலுார் ரயில் தண்டவாளத்தில் பாதையை அடைக்க எதிர்ப்பு

வண்டலுார் ரயில் தண்டவாளத்தில் பாதையை அடைக்க எதிர்ப்பு


ADDED : செப் 12, 2024 01:35 AM

Google News

ADDED : செப் 12, 2024 01:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி,:அண்ணா உயிரியல் பூங்கா எதிரில், வண்டலுார் மற்றும் ஊரப்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே, திறந்த நிலையில் உள்ள தண்டவாளப் பகுதியை, பாதையாக அப்பகுதிவாசிகள் பயன்படுத்தி வந்தனர்.

ஓட்டேரி விரிவு பகுதியை சேர்ந்தோர், இந்த பாதையில், பல ஆண்டுகளாக, ஆபத்தான முறையில் கடந்துசென்று வந்தனர். மேலும், இந்த இடத்தில் கடக்கும் கால்நடைகள், ரயில்கள் மோதி அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.

இதனால், அப்பகுதியில் திறந்த நிலையில் உள்ள பாதையை, நேற்று முன்தினம் சிமென்ட் கல் துாண் பயன்படுத்தி, யாரும் கடந்து செல்ல முடியாதபடி அடைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதை அறிந்த அப்பகுதிவாசிகள், ரயில்வே பாதையை அடைக்க எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து, தகவல் அறிந்ததும் ஓட்டேரி மற்றும் கூடுவாஞ்சேரி போலீசார் விரைந்து வந்து, வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது, பொதுமக்கள் நடந்து செல்லும் அளவிற்கு பாதை விட வேண்டும் என, கூறினர். அதற்கு, ரயில்வே அதிகாரிகள் சம்மதம் தெரிவித்து, ஒருவர் நடந்து செல்லும் வகையில் பாதை விட்டு, மற்ற இடங்களை அடைக்கும் பணியில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us