/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
முதலியார்குப்பம் சுகாதார நிலையத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டுகோள்
/
முதலியார்குப்பம் சுகாதார நிலையத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டுகோள்
முதலியார்குப்பம் சுகாதார நிலையத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டுகோள்
முதலியார்குப்பம் சுகாதார நிலையத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டுகோள்
ADDED : ஆக 30, 2024 12:32 AM

செய்யூர்:செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட முதலியார்குப்பம் கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இங்கு, 35 ஆண்டுகளுக்கு முன், கிழக்கு கடற்கரை சாலை ஓரத்தில், அரசு துணை ஆரம்ப சுகாதார நிலைய அமைக்கப்பட்டது. இதன் வாயிலாக, ஓதியூர், நயினார்குப்பம், முதலியார்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும், 2,000க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.
இங்கு, கர்ப்பிணியருக்கான பரிசோதனை, குழந்தைகளுக்கு தடுப்பூசி, ரத்த அழுத்தம் பரிசோதனை, சாதாரண காய்ச்சல், சளி, தலைவலி போன்ற நோய்களுக்கு, மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகள் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இங்கு பணியில் இருந்த நர்ஸ் மாறுதலாகி சென்றுவிட்டார். அதன்பின் யாரும் நியமனம் செய்யப்படவில்லை. அதனால், சில மாதங்களாக, துணை சுகாதார நிலையம் செயல்படாமல் முடங்கியுள்ளது.
அதனால், இப்பகுதிவாசிகள் பொது மருத்துவத்திற்காக, செய்யூர் மற்றும் கடப்பாக்கம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முதியவர்கள் மற்றும் கர்ப்பிணியர் சிரமப்படுகின்றனர்.
எனவே, இப்பகுதி மக்கள் நலனை கருத்தில் கொண்டு, அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தை மீண்டும் செயல்படுத்த, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.