sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சாலையில் தேங்கும் மழைநீர் கால்வாய் அமைக்க கோரிக்கை

/

சாலையில் தேங்கும் மழைநீர் கால்வாய் அமைக்க கோரிக்கை

சாலையில் தேங்கும் மழைநீர் கால்வாய் அமைக்க கோரிக்கை

சாலையில் தேங்கும் மழைநீர் கால்வாய் அமைக்க கோரிக்கை


ADDED : ஜூன் 09, 2024 02:34 AM

Google News

ADDED : ஜூன் 09, 2024 02:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியம், கேளம்பாக்கம்- - வண்டலுார் இடையே உள்ள மாம்பாக்கம் ஊராட்சியில், 5,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

இங்குள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 4,000த்திற்கும் மேற்பட்ட மாணவ- - மாணவியர் படிக்கின்றனர். தவிர, தொழில் நிறுவனங்கள், வணிக கடைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் அதிக அளவில் உள்ளன.

மாம்பாக்கம் வழியாக, திருப்போரூர் - -தாம்பரம், கொளத்துார்- - மேடவாக்கம், புங்கேரி - -தாம்பரம், கோவளம் -- தாம்பரம், மாமல்லபுரம்- - தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் செல்கின்றன.

பேருந்து நிறுத்தம் அருகே, சாலையோரத்தில் வடிகால்வாய் வசதி இல்லாததால், மழை நேரத்தில் தண்ணீர் தேங்குகிறது. இதனால் சாலையில் நடந்து செல்வோரும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக, மக்கள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, மாம்பாக்கம் சாலையோரங்களில் மழைநீர் தேங்காமல் இருக்க, மழைநீர் வடிகால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us