sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

துணை சுகாதார நிலையம் அமைக்க கோரிக்கை

/

துணை சுகாதார நிலையம் அமைக்க கோரிக்கை

துணை சுகாதார நிலையம் அமைக்க கோரிக்கை

துணை சுகாதார நிலையம் அமைக்க கோரிக்கை


ADDED : மே 20, 2024 05:37 AM

Google News

ADDED : மே 20, 2024 05:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர் : திருப்போரூர் ஒன்றியத்தில் கேளம்பாக்கம், செம்பாக்கம், மானாமதி, சிறுங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன.

சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்தோர், இப்பகுதிகளில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இதில், பூண்டி உட்பட ராயமங்கலம், எடர்குன்றம் உள்ளிட்ட கிராமங்களுக்கு போதியளவு போக்குவரத்து வசதி இல்லை. இப்பகுதி வாசிகள் மருத்துவமனைக்கு செல்ல சிரமப்பட வேண்டியுள்ளது.

எனவே, பூண்டி கிராமத்தில் துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என, அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து கிராம வாசிகள் கூறியதாவது:

பூண்டி உள்ளிட்ட கிராமங்களில், 2,000த்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். மருத்துவ தேவைகளுக்காக சிறுங்குன்றம், மானாமதி அல்லது செம்பாக்கத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்வதால் கடும் சிரமப்படுகின்றனர்.

எனவே, பூண்டி பகுதியில் துணை சுகாதார நிலையம் அமைத்தால், சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு வசதியாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us