/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
எரிசாராயம் கடத்திய 8 பேருக்கு 'காப்பு'
/
எரிசாராயம் கடத்திய 8 பேருக்கு 'காப்பு'
ADDED : பிப் 27, 2025 11:45 PM
சென்னை,எழும்பூர், காந்தி இர்வின் சாலையில் உள்ள ஆவண காப்பகம் அருகே போலீசார் நேற்று முன்தினம் இரவு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த வெளிமாநிலத்தைச் சேர்ந்த, 8 பேரை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் வைத்திருந்த சாக்கு மூட்டையை போலீசார் சோதனை செய்தனர். இதில், 178 லிட்டர் எரிசாராயம், 85 மதுபாட்டில்கள், 390 கிராம் குட்கா பாக்கெட்டுகள், 2.50 கிலோ மாவா உள்ளிட்டவை இருந்தது தெரியவந்தது.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ் உய்கே, உட்பட, 8 பேர் எரிசாராயம் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.
நேற்று, 8 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து, எரிசாராயம், குட்கா, மதுபாட்டில், மாவா உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.